இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளர்: எதிர்க்கட்சிகள் ஆலோசனை

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சியினர் தில்லியில் முதல்முறையாக கூடி புதன்கிழமை ஆலோசனை நடத்தினர்.

News image
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக தில்லியில் ஆலோசனை நடத்திய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே
Updated On :14 ஜூன் 2017, 7:48 pm

DIN

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சியினர் தில்லியில் முதல்முறையாக கூடி புதன்கிழமை ஆலோசனை நடத்தினர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து முடிவு செய்வதற்காக 10 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் அக்கட்சியின் தலைவர் சரத் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சார்பில் அதன் தலைவர் லாலு பிரசாத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் திமுக, சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் அவற்றின் முக்கிய தலைவர்களும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் தில்லியிலுள்ள மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்தின் அலுவலகத்தில் புதன்கிழமை முதல்முறையாக கூடி குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பிலான பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து விவாதித்தனர்.
அடுத்த மாதம் 17-ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
சோனியாவுடன் இன்று சந்திப்பு: இதனிடையே, குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் தேர்வு தொடர்பாக விவாதிக்க மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வியாழக்கிழமை சந்திக்கிறது.
அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொது வேட்பாளரை மத்திய அரசு நியமிக்கவில்லை எனில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.