தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நேபாளம் மற்றும் பூட்டானில் ஆதார் அட்டை செல்லாது: உள்துறை அமைச்சகம் 'பகீர்'!

இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டையை நேபாளம், பூடான் உள்ளிட்ட அண்டைநாடுகளில் பயணம் செல்வதற்கான ஆவணமாக பயன்படுத்த முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :25 ஜூன் 2017, 10:36 am

DIN

புதுதில்லி: இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டையை நேபாளம், பூடான் உள்ளிட்ட அண்டைநாடுகளில் பயணம் செல்வதற்கான ஆவணமாக பயன்படுத்த முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவினை பொறுத்த வரை மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கான மானியத்தொகையை பெறுவதிலிருந்து, அவசர தேவைக்காக பயன்படுத்தும் ஆம்புலன்ஸ் வரை ஆதார் எண் என்பது அநேகமாக எல்லா இடங்களிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சேவைகளுக்கு ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது என்ற உச்ச நீதிமன்றம் உத்தரவையும் மத்திய அரசு இத்தகைய நடவடிகைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் ஆதார் அட்டையை நேபாளம், பூடான் உள்ளிட்ட அண்டைநாடுக்ளில் பயணம் செல்வதற்கான ஆவணமாக பயன்படுத்த முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பொதுவாக இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பூடானுக்கு ஒருவர் செல்வதானால் பாஸ்போர்ட், விசா எதுவும் தேவையில்லை. சாதாரண வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு ஆகியவை கொண்டே நீங்கள் அந்த இரண்டு நாடுகளுக்கும் சுற்றுலா சென்று வரலாம்.

ஆனால் தற்பொழுது  ஆதார் அட்டைக்கு பதிலாக தேர்தல் கமிஷனால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை அல்லது உரிய பாஸ்போர்ட்டை காண்பித்து அங்கு செல்லலாம்.

மேலும், 15 வயதுக்கு குறைவானவர்கள் மற்றும் 65 வயதை கடந்தவர்கள் தங்களது அடையாளம் மற்றும் வயதை நிரூபிப்பதற்கு தேவையான சான்றாக வருமான வரித்துறையினரின் பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், ரேசன் அட்டை, மத்திய அரசின் சுகாதார திட்ட உறுப்பினருக்கான அடையாள அட்டை ஆகியவற்றை காட்டி மேற்கண்ட நாடுகளுக்கு செல்லலாம் எனவும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.