புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பாதுகாப்புத் துறை அமைச்சராக ஜேட்லிக்கு கூடுதல் பொறுப்பு!

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு கூடுதல் பொறுப்பாக பாதுகாப்புத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :13 மார்ச் 2017, 10:02 am

DIN

புதுதில்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு கூடுதல் பொறுப்பாக பாதுகாப்புத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த ஐந்து மாநில தேர்தலில் கோவாவில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் உதவியுடன் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைக்க உள்ளது. பாஜகவின் முதல்வராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவர் நாளை மாலை ஐந்து மணிக்கு கோவா மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளதால், தன்னுடைய  அமைச்சர் பதவியை இன்று காலை ராஜிநாமா செய்தார்.

அதனைத் தொடர்ந்து அவரது பாதுகாப்புத் துறையானது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லீக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. 

விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.