சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

இது என்ன பள்ளிக்கூடமா? எரிச்சலான மக்களவை சபாநாயகர்!

நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் உறுப்பினர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு எரிச்சலான மக்களவை சபாநாயகர் ...

News image
Updated On :22 மார்ச் 2017, 9:29 am

புதுதில்லி: நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் உறுப்பினர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு எரிச்சலான மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இது என்ன பள்ளிக்கூடமா? என்று கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றம் இன்று துவங்கியவுடன் பிரதமர் மோடியும் நிகழ்வுகளில் பங்கு பெற்றார் பல்வேறு துறை சார்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அமைதியான முறையில்பதில்கள் வழங்கப்பட்டன. அவை அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

கேள்வி நேரம் முடிந்தவுடன் பிரதமர் மோடி அவையை விட்டு வெளியேறினார். அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் ஒருவரோடு ஒருவர் அவையில் அங்கங்கே பேசிக் கொள்ளத் தொடங்கினர். இதன் காரணமாக அவையெங்கும் சப்தம் எழுந்தது.

உடனே சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உறுப்பினர்கள் தயவு செய்து அமைதியாக இருக்குமாறு வேண்டினார்.ஆனால் அப்போதும் தொடர்ந்து சப்தங்கள் நிலவியதால் எரிச்சலான சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இது என்ன பள்ளிக்கூடமா? என்று உறுப்பினர்ககளை நோக்கி கேள்வி எழுப்பினார். 

அவரின் இந்த வார்த்தைகளுக்குப் பிறகுதான் அவை அமைதியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.