ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விவசாயிகள் தற்கொலை குறித்து 4 வாரத்தில் அறிக்கை கொடுங்க: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! 

நாடெங்கும் நிகழும் விவசாயிகள் தற்கொலை குறித்து நான்கு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2017, 11:59 am

தினமணி

புதுதில்லி: நாடெங்கும் நிகழும் விவசாயிகள் தற்கொலை குறித்து நான்கு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடெங்கும் விளைச்சல் இன்மை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக ஆகி விட்டதாகவும், அதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கானது தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், டி.எஸ்.சந்திரசூட் மற்றும் எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விபரம் வருமாறு:

நாடு முழுவதும் விளைச்சல் தொடர்பான பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது ஒருமுக்கியமான பிரச்சினையாகும். இதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? எனவே இது குறித்து விரிவான அறிக்கையொன்றை நான்கு வாரங்களில் மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.