கேரளம்: பெண் ஐஏஎஸ் அதிகாரியை கரம் பிடிக்கிறார் காங்கிரஸ் எம்எல்ஏ
கேரளத்தில் பெண் ஐஏஎஸ் அதிகாரியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளம் எம்எல்ஏ ஒருவர் காதல் திருமணம் செய்யவுள்ளார்.


கேரளத்தில் பெண் ஐஏஎஸ் அதிகாரியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளம் எம்எல்ஏ ஒருவர் காதல் திருமணம் செய்யவுள்ளார்.
அருவிக்கரை சட்டப் பேரவை தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் அவரது பெயர் கே.எஸ். சபரிநாதன் (33). இந்நிலையில், முகநூலில் அவர் வெளியிட்ட பதிவில், திருவனந்தபுரத்தில் துணை ஆட்சியராக இருக்கும் திவ்யாவை திருமணம் செய்யவிருக்கும் தகவலையும், இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். பொது மக்களின் ஆசீர்வாதம் தங்கள் இருவருக்கும் வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியிலும், தங்களது திருமணம் காதல் திருமணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
துணை ஆட்சியர் திவ்யா கூறுகையில், 'அலுவல் ரீதியாக சபரிநாதனை முதன்முதலாக சந்தித்தேன். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது' என்றார்.
சபரிநாதனின் தந்தை ஜி.கார்த்திகேயன், கேரள மாநில காங்கிரஸ் கட்சியில் மறைந்த மூத்த தலைவர்களுள் ஒருவராவார். கேரள மாநில சட்டப் பேரவைத் தலைவராக அவர் பதவி வகித்துள்ளார். அவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்தான். ஜி. கார்த்திகேயனின் காதல் திருமணம், மலையாளத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
திருவனந்தபுரத்தில் சபரிநாதனுக்கும், திவ்யாவுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதாக அவர்களது உறவினர் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...