மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ராணுவப் படைவீரர்கள் செயலி மூலம் குறைகளைத் தெரிவிக்கலாம்: ராஜ்நாத் சிங்

மத்திய துணை ராணுவப் படைவீரர்கள் தங்களது குறைகளைத் தெரிவிப்பதற்கு மத்திய அரசு உருவாக்கியுள்ள பிரத்யேக செல்லிடப்பேசி செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர்

News image
Updated On :21 மே 2017, 11:22 pm

DIN

மத்திய துணை ராணுவப் படைவீரர்கள் தங்களது குறைகளைத் தெரிவிப்பதற்கு மத்திய அரசு உருவாக்கியுள்ள பிரத்யேக செல்லிடப்பேசி செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

சிக்கிமில் மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள அவர், கேய்சிங் பகுதியில் துணை ராணுவப் படைகளில் ஒன்றான எஸ்எஸ்பி-யின் 36ஆவது படைப்பிரிவு தலைமையகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார். சர்வதேச எல்லையையொட்டி அமைந்துள்ள பகுதியில் உள்ள நிலவரம் குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, ராணுவ வீரர்களிடையே அவர் பேசியதாவது:
வீரர்கள் அனைவரும் தங்கள் குறைகளைத் தெரிவிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பிரத்யேகமாகத் தயாரித்துள்ள செல்லிடப்பேசி செயலியைப் பயன்படுத்த வேண்டும்.
இந்தச் செயலியை நான் ஒவ்வொரு மாதமும் தனிப்பட்ட முறையில் பார்ப்பேன். அதில் பதிவு செய்யப்பட்டுள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதா என்பதை நான் கவனிப்பேன் என்றார் ராஜ்நாத் சிங்.
எஸ்எஸ்பி படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களுடன் அவர் மதிய உணவு சாப்பிட்டார்.
முன்னதாக, எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தேஜ் பகதூர் யாதவ் என்ற வீரர் நான்கு மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளமான முகநூலில் வெளியிட்ட பதிவில், படைவீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மோசமாக இருப்பதாகக் குறை கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து சில விடியோ காட்சிகளும் அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. மேலும் சில வீரர்களும் தங்கள் குறைகளை முகநூலில் வெளியிட்டனர்.
இதைத் தொடர்ந்து படைவீரர்கள் தங்கள் குறைகளைத் தெரிவிப்பதற்காகவே மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கிய செயலியை ராஜ்நாத் சிங் இம்மாதம் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.