அதே போல, இன்னொரு விதி என்னசொல்கிறது என்றால், காலையில் அவசர அவசரமாக வேலைக்குக் கிளம்புகிறீர்கள். வழக்கம் போல ஹெல்மெட் எடுக்க மறந்துவிட்டால்... வழியில் போக்குவரத்துக் காவலர் இல்லை என்றால் பரவாயில்லை. இருந்து, அவர்கள் உங்களை நிறுத்தினால், நீங்கள் காரணம் கூறி அபராதமும் செலுத்துகிறீர்கள். பிறகு அப்படியே கிளம்பி விடலாமா? இல்லை, அபராதம் செலுத்தியதற்கான ரசீதை எழுதி மறக்காமல் வாங்கிக் கொள்ளுங்கள். ஏன் என்றால், இன்னும் அலுவலகம் போய் சேரவில்லை. வழியில் வேறு போக்குவரத்துக் காவலர் நிறுத்தலாம், மாலை வீட்டுக்குத் திரும்பும் போது இதே சிக்கலில் மாட்டலாம். எனவே, அபராதம் செலுத்தியதற்கான ரசீது உங்கள் கையில் இருந்தால் ஒரே குற்றத்துக்காக பல முறை அபராதம் செலுத்துவதில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம்.