பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பிரதமர் மோடி இன்று 4 நாடுகளுக்குப் பயணம்

ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா, பிரான்ஸ் ஆகிய 4 நாடுகளுக்கு 6 நாட்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை செல்கிறார்.

News image
Updated On :28 மே 2017, 8:20 pm

DIN

ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா, பிரான்ஸ் ஆகிய 4 நாடுகளுக்கு 6 நாட்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை செல்கிறார்.
பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இந்தியாவில் முதலீடு செய்ய அந்நாடுகளின் தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கவும் மேற்கண்ட நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார்.
தில்லியிலிருந்து தனிவிமானம் மூலம் திங்கள்கிழமை ஜெர்மனிக்கு மோடி செல்கிறார். அங்கு அந்நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை அவர் சந்தித்து கலந்துரையாடுகிறார். பின்னர், அந்நாட்டின் அதிபர் ஃபிரான்க்-வால்டர் ஸ்டெயின்மியரையும் அவர் சந்திக்க உள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலைதளமான முகநூலில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:
வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, புத்தாக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், திறன்மேம்பாடு, நகர்ப்புற உள்கட்டமைப்பு, ரயில்வே மற்றும் விமானப்போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் இனிவரும் காலங்களில் கூடுதல் ஒத்துழைப்பை அளிப்பது தொடர்பாக மெர்கலுடன் கலந்தாலோசனை நடத்த இருக்கிறேன் என்று அதில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் தொழிலதிபர்களுடன் இரு தலைவர்களும் வர்த்தம், முதலீடு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அங்கிருந்து ஸ்பெயினுக்கு மோடி செவ்வாய்க்கிழமை செல்கிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு அந்நாட்டுக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி ஆவார்.
அங்கு, மன்னர் 6-ஆவது ஃபிலிப்பையும், அந்நாட்டு அதிபர் மரியானோ ரஜோயையும் அவர் சந்தித்து கலந்துரையாடுகிறார்.
அங்கிருந்து ரஷியாவுக்குச் செல்லும் அவர் வரும் 31-ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ள 18-ஆவது இந்திய-ரஷிய மாநாட்டில் பங்கேற்கிறார். அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதினை சந்தித்து அவர் பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்தாலோசனை நடத்த உள்ளார். கடைசியாக பிரான்ஸýக்கு அவர் செல்கிறார். அங்கிருந்து நாடு திரும்புகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.