டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மாட்டுக்கறி விருந்துகள் குறித்து மதச்சார்பற்றவர்கள் மெளனம் ஏன்? உ.பி. முதல்வர் ஆதித்யநாத் கேள்வி

பிற மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்று கூறும் மதச்சார்பற்றவர்கள், மாட்டுக்கறி விருந்து குறித்து மெளனம் காப்பது ஏன்? என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேள்வியெழுப்பியுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:38 pm

DIN

பிற மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்று கூறும் மதச்சார்பற்றவர்கள், மாட்டுக்கறி விருந்து குறித்து மெளனம் காப்பது ஏன்? என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுகுறித்து லக்னெளவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பாஜக கூட்டத்தில் அவர் பேசியதாவது: அனைவரும் பிற மதத்தினரின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும் என்று மதச்சார்பின்மைவாதிகள் கூறுவதை நான் கேட்டுள்ளேன்.
ஆனால், சந்தைகளில் கறிக்காக மாடுகளை விற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து கேரள மாநிலத்தில் மாட்டுக்கறி விருந்துகள் நடைபெறுகின்றன.
ஹிந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் நடைபெறும் அந்தப் போராட்டங்கள் குறித்து மதச்சார்பற்றவர்கள் ஏன் மெளனம் காக்கின்றனர்?
தில்லி பல்கலைக்கழகம், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உரக்கக் குரலெழுப்பியவர்கள் எல்லாம், மாட்டுக் கறி விருந்துகள் குறித்து வாயே திறக்காதது ஏன்? என்றார் அவர். சந்தைகளில் கறிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு கேரள மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த உத்தரவை எதிர்க்கும் வகையில், கேரளம் முழுவதும் மாட்டுக் கறி உண்ணும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.