மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காஷ்மீரும், காஷ்மீரிகளும் இந்தியாவுக்கே சொந்தம்

காஷ்மீர், காஷ்மீர் மக்கள், காஷ்மீர் கலாசாரம் ஆகிய அனைத்தும் இந்தியாவுக்கே சொந்தம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தார்.

News image
Updated On :30 மே 2017, 8:00 pm

DIN

காஷ்மீர், காஷ்மீர் மக்கள், காஷ்மீர் கலாசாரம் ஆகிய அனைத்தும் இந்தியாவுக்கே சொந்தம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்திலுள்ள சுபர்தி பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
காஷ்மீர், அந்த மாநில மக்கள், அந்த மாநிலத்தின் கலாசாரம் ஆகிய அனைத்தும் இந்தியாவுக்கே சொந்தமானதாகும். எல்லையில் பாதுகாப்புப் படை வீரர்களின் கௌரவத்துக்கு பங்கம் விளைவித்து வருபவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டு வருகிறது. ராணுவ வீரர்கள் 2 பேரின் தலைகளைத் துண்டித்த பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டது.
20 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள பி-20 மாநாட்டில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, 'ஊழல் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா போர் புரிந்து வருகிறது. அந்த நடவடிக்கையை மேலும் சிறப்பாக மேற்கொள்ள வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை தெரியப்படுத்தி உதவ வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
அதன்பயனாக, வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை நம்மால் தற்போது ஆய்வு செய்ய முடிகிறது என்று ராஜ்நாத் சிங் பேசினார்.
பணமதிப்பிழப்பு விவகாரம், விவசாயிகள் பிரச்னை, ஊழல், பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ராஜ்நாத் சிங் இந்த நிகழ்ச்சியில் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.