டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தாஜ்மஹல் அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தம்? சுப்ரமணியன் சுவாமி கொளுத்தும் புதிய வெடிகுண்டுத் திரி! 

தாஜ்மஹல் அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து பாரதிய ஜனதா கட்சி முக்கியத் தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ள கருத்து புதிதாய் சர்ச்சைகளுக்கு திரி கிள்ளியுள்ளது

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:54 pm

DIN

புதுதில்லி: தாஜ்மஹல் அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து பாரதிய ஜனதா கட்சி முக்கியத் தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ள கருத்து புதிதாய் சர்ச்சைகளுக்கு திரி கிள்ளியுள்ளது

இந்திய வரலாற்றில் தாஜ்மஹலுக்கு இடம் இல்லை என்று கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உபி பாஜக எம்.எல்.ஏ சங்கீத் சோம் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவரது கருத்துக்கு ஆதரவு, கண்டனங்கள் மற்றும் எதிர் கருத்துக்கள் என தாஜ்மஹல் தொடர் விவாதப் பொருளானது.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி முக்கியத் தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ள கருத்துகள், மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

முகலாய அரசரான ஷாஜஹான், தாஜ்மஹல் தற்பொழுது அமைந்துள்ள இடத்தினை, ஜெய்ப்பூரின் அப்போதைய ராஜாக்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளார். அதற்கு ஈடாக அவர் நாற்பது கிராமங்களை ஜெய்ப்பூர் ராஜாக்களுக்கு வழங்கியுள்ளார். ஆனால் அவை ஒருபோதும் தாஜ்மஹல் அமைந்துள்ள நில மதிப்புக்கு ஒரு பொழுதும் ஈடாகாது.

இது தொடர்பான ஆவணங்கள் எனக்கு கிடைத்துள்ளன. அவற்றை உரிய சமயத்தில் ஊடகங்களிடம் வெளியிடுவேன். அந்த ஆவணங்களின் வாயிலாக அங்கு முன்னர் ஒரு கோவில் இருந்ததாக தெரிய வருகிறது. ஆனால் அந்த கோவில் இடிக்கப்பட்ட பின்னர்தான் அங்கு தாஜ்மஹல் கட்டப்பட்ட தா என்பது குறித்து தெரியவில்லை.

தாஜ்மஹலை இடிக்க வேண்டும் என்பது பாஜகவின் நோக்கம் இல்லை. ஆனால் இஸ்லாமியர்கள் ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்ட நாற்பதாயிரத்துக்கும் மேலான கோவில்களில் மூன்று கோவில்கள் மட்டுமே மீண்டும் கட்டப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், அயோத்தியில் ராமர் கோவில்,  மதுராவில் கிருஷ்ணர் கோவில் மற்றும் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய மூன்றினை மட்டுமே நாங்கள் கட்ட விரும்புகிறோம்.

இவ்வாறு சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.