விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கைதி சுகேஷை சுதந்திரமாக உலவ விட்ட 7 தில்லி போலீஸார் பணியிடை நீக்கம்

இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுத் தருவதாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தரகர் சுகேஷ்

News image
Updated On :20 அக்டோபர் 2017, 10:56 pm

DIN

இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுத் தருவதாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தரகர் சுகேஷ் சந்திரசேகரை பெங்களூரில் சுதந்திரமாக உலவ விட்ட 7 தில்லி போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தரும் நோக்கில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக டி.டி.வி.தினகரனிடம் பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை தில்லி போலீஸார் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி கைது செய்தனரர். அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, மற்றொரு வழக்கில் சுகேஷை கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அவரை தில்லி போலீஸார் கடந்த 9-ஆம் தேதி பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரை தங்கள் காவலில் இருந்து விடுவித்து, இரு தினங்களுக்கு அவர் சுதந்திரமாக சுற்றி வர போலீஸார் அனுமதித்தனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு பல்வேறு சட்டவிரோத பரிவர்த்தனைகளிலும் வர்த்தக பேரங்களிலும் சுகேஷ் ஈடுபட்டதைக் கண்டறிந்த வருமான வரித்துறை, இது தொடர்பாக தில்லி காவல்துறை ஆணையர் அமுல்யா பட்நாயக்கிடம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது.
அதன் அடிப்படையில், சுகேஷை பெங்களூரில் சுதந்திரமாக உலவ விட்ட 7 தில்லி போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் காவல் துறையின் 3-ஆவது பட்டாலியன் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.