தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வீட்டுக் கூரை மேல் விழுந்த விமான ஜன்னல்: அதிர்ந்து ஓடிய குடும்பம்! 

ஹைதராபாத் அருகே வீட்டுக் கூரை மேல் விமான ஜன்னல் ஒன்று விழுந்த காரணத்தால் அந்தப் பகுதி  மக்கள் அதிர்ச்சியில் உறைநதுள்ளனர்.

News image
Updated On :31 அக்டோபர் 2017, 10:11 am

ஹைதராபாத்: ஹைதராபாத் அருகே வீட்டுக் கூரை மேல் விமான ஜன்னல் ஒன்று விழுந்த காரணத்தால் அந்தப் பகுதி  மக்கள் அதிர்ச்சியில் உறைநதுள்ளனர்.

ஹைதராபாத்தின் வெளிப்புறப் பகுதியில் அமைந்துள்ள லாலாபெட் மாவட்டத்தில் உள்ளது யாதவ் பஸ்தி என்னும் பகுதி. இங்கு கணேஷ் யாதவ் என்பவரது வீட்டுக் கூரை மேல் நேற்று நண்பகல் 12 மணி அளவில் பெரிய சத்ததுடன் ஏதோ ஒரு பொருள் விழுவது போல் சத்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சியில் வீட்டில் உள்ளவர்கள் வீட்டினை விட்டு வெளியே ஓடியுள்ளார்கள்.

பின்னர் மேலே சென்று பார்த்த பொழுதுதான் அது  விமானம் ஒன்றின் ஜன்னல் என்பது தெரிய வந்துள்ளது. விழுந்த அதிர்ச்சியின் காரணமாக மாடியின் மேல் இருந்த சிமெண்ட் குடிநீர் தொட்டியில் மட்டும் லேசான விரிசல் விழுந்திருந்தது.

சம்பவம் அறிந்து அங்கு வந்து விசாரணை நடத்திய லலகுடா காவல் நிலைய கண்காணிப்பாளர் ராமு கூறியதாவது:

இந்த ஜன்னலானது தெலங்கானா மாநில விமானக் கழகத்திற்கு சொந்தமானது. டைமண்ட் DA 42 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் ஒன்றரை ஆண்டுகள் வயதானதாகும். ஆஸ்திரேலிய தயாரிப்பான இரட்டை எஞ்சின் கொண்ட கொண்ட இந்த விமானம் நான்கு இருக்கைகள் கொண்டதாகும். தற்பொழுது இந்த ஜன்னல் எங்களது பொறுப்பில் உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கணேஷ் புகார் எதுவும் கொடுக்காததால் வழக்கு எதுவும் பதியப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.