ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

"புளூ வேல்' விளையாட்டு: ரயில் முன்பு பாய்ந்து மாணவர் தற்கொலை

மத்தியப் பிரதேசத்தின் தாமோ நகரில் புளூ வேல் விளையாட்டில் ஈடுபட்ட 12}ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:48 pm

DIN

மத்தியப் பிரதேசத்தின் தாமோ நகரில் புளூ வேல் விளையாட்டில் ஈடுபட்ட 12}ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சாவதற்கு முன்பு ஓடும் ரயில் முன்பு நின்று சுயபடம் (செல்ஃபி) எடுத்துக் கொண்ட அந்த 17 வயது மாணவர், பின்னர் ரயில் முன்பு பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் அனைத்தும் அப்பகுதியில் அமைத்துள்ள வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
புளு வேல் விளையாட்டால்தான் அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது செல்போனைக் கைப்பற்றி தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். கடந்த இருநாள்களாக ரயில்வே தண்டவாளம் அருகே வந்து ஓடும் ரயிலுக்கு முன்பு புகைப்படம் எடுத்துள்ளார்.
சனிக்கிழமை இரவு புளு வேல் விளையாட்டின் இறுதிக் கட்டத்துக்கு வந்த அவர், தனது மோட்டார் சைக்கிளில் ரயில் தண்டவாளம் அமைந்துள்ள பகுதிக்கு வந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு, மீண்டும் ஓடும் ரயில் முன்பு நின்று புகைப்படங்களை எடுத்துள்ளார். பிறகு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான விடியோக்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். அவர் புளூ வேல் விளையாட்டில் ஈடுபட்டதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று போலீஸôர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.