பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இந்தியாவின் பொதுக்கடன் எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் மொத்த பொதுக்கடன் ரூ.61.13 லட்சம் கோடியிலிருந்து 63.35 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய காலாண்டில் இது 3.6 சதவீதமாக

News image
Updated On :5 செப்டம்பர் 2017, 2:07 am

புதுதில்லி: இந்தியாவின் மொத்த பொதுக்கடன் ரூ.61.13 லட்சம் கோடியிலிருந்து 63.35 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய காலாண்டில் இது 3.6 சதவீதமாக இருந்தது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகத்தின் பொது கடன் மேலாண்மை வெளியிட்டுள்ள அறிக்கையில், முந்தைய காலாண்டில் 1.15 சதவீத சரிவு ஏற்பட்டதுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டிற்கான முதல் காலாண்டில் ஒப்பிடுகையில் 1.6 சதவீத உயர்வுடன் இந்தியாவின் மொத்த பொதுக்கடன் 3.6 சதவிகிதம் உயர்ந்து ரூ 63.35 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 2017 ஜூன் மாதத்தில் உள்நாட்டின் கடன் 93 சதவிகிதமாக இருந்தது என்றும், நிதிச்சந்தையின் கடன் 83.2 சதவிகிதமாக இருந்தது என்று கூறப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டின் தொடக்கத்திலேயே மத்திய அமைச்சகங்கள் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கியுள்ளதால், அதற்காக அதிகப்படியான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த ஆண்டில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு பெறும் முதல் காலாண்டின் கடன் தொகை 60 ஆயிரம் கோடி என சுட்டிக்காட்டியுள்ளது.

அமைச்சரகங்களின் செலவினங்கள் பெருமளவில் திருப்பியளிக்கும் வகையிலேயே உள்ளது. பொதுவாக ஆண்டின் முதல் பாதியில் குறைவான பணப்புழக்கங்களுடன் இணைந்துள்ளது. "இந்த காலாண்டில் மிகைப்பற்று (ஓவர் டிராஃப்ட்) சுருக்கமாகக் கிடைத்தள்ளது," மேலும் துறைமுகங்கள், விமான நிலையங்கள், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளுக்கான நிதி ஓதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.