ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நீங்கள் முறையிட வேண்டியது ஊடகமல்ல உயர் நீதிமன்றம்: லாலு மீது நிதீஷ் தாக்கு

ஊழல் விவகாரம் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் ஊடகத்திடம் பேட்டியளிப்பதை தவிர்த்துவிட்டு நீதிமன்றத்தை நாட வேண்டும் என நிதீஷ் குமார் தெரிவித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:51 pm

DIN

தன் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஊடகங்களிடம் விளக்கமளிப்பதை விடுத்து நீதிமன்றத்தை நாட வேண்டும் என லாலு பிரசாத் யாதவ் மீது பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கடுமையாகச் சாடினார்.

ஆகஸ்ட் 26-ந் தேதி என்ஜிஓ அமைப்பான ஸ்ரீஜனில் 2005-2013 காலகட்டத்தில் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்தது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. 

அதுமட்டுமல்லாமல் ரயில்வே கேன்டீன் ஊழல் வழக்கு தொடர்பாக லாலு மகன் தேஜஸ்வி மீதும் சிபிஐ விசாரித்து வருகிறது.

பீகார் மக்களை நிதீஷ் குமார் மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டார். ஜனநாயகத்தை படுகொலை செய்து விட்டர். இந்த சிபிஐ வழக்குகளில் உண்மையில்லை. 

இதில் நிதீஷுக்கு தான் தொடர்பு உள்ளது. அதற்கான ஆவணங்களை அவர் அழித்து விட்டார் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பேட்டியளித்தார்.

இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை ஊடகங்களிடம் விளக்கம் அளிப்பதை விடுத்து தக்க ஆதாரங்களுடன் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை நாடி உண்மையை நீருபிக்க வேண்டும் என லாலு பிரசாத் யாதவுக்கு பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.