திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இந்தியா-பெலாரஸ் இடையே ஆயுதத் தயாரிப்பு உள்பட 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா-பெலாரஸ் இடையே ராணுவ ஆயுதத் தயாரிப்பை மேம்படுத்துவது உள்பட 10 முக்கிய ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை கையெழுத்தாகின.

News image
தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லூகாஸ்ஹென்கோ முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொள்ளும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர்
Updated On :12 செப்டம்பர் 2017, 7:54 pm

DIN

இந்தியா-பெலாரஸ் இடையே ராணுவ ஆயுதத் தயாரிப்பை மேம்படுத்துவது உள்பட 10 முக்கிய ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை கையெழுத்தாகின.
இருநாள் பயணமாக இந்தியா வந்துள்ள பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லூகாஸ்ஹென்கோவை பிரதமர் மோடி தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். 
அப்போது இரு நாடுகளும் இணைந்து ராணுவ ஆயுதத் தயாரிப்பை மேம்படுத்துவது, வர்த்தக, பொருளாதர ஒத்துழைப்பு உள்பட 10 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸும் இந்தியாவும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு 25 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இரு நாடுகள் இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மோடியும், அலெக்சாண்டரும் ஆலோசனை நடத்தினர். பெலாரஸ் அதிபருடன் அந்நாட்டின் தொழில்துறையைச் சேர்ந்த பலரும் வந்துள்ளனர்.
இந்தச் சந்திப்பு குறித்து மோடி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ் பெலாரஸ் உற்பத்தித் துறை, ராணுவ ஆயுதத் தயாரிப்பு ஆகியவை தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டருடன் இணைந்து இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளோம். 
பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, கல்வி, விளையாட்டுத் துறை உள்பட பல்வேறு பிரிவுகளில் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளோம்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, திங்கள்கிழமை இரவு அலெக்சாண்டர் லூகாஸ்ஹென்கோ தில்லிக்கு வந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.