ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

விபத்தில் காயமடைந்தவரை முதுகில் சுமந்துகொண்டு மருத்துவமனையில் சேர்த்த எம்.எல்.ஏ., திவேதி!

உத்தரபிதேசத்தில் உள்ள பரூக்காபாத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த ஒருவரை தனது முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில்

News image
Updated On :24 செப்டம்பர் 2017, 4:33 pm

DIN

பரூக்காபாத்: உத்தரபிதேசத்தில் உள்ள பரூக்காபாத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த ஒருவரை தனது முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த பாஜக எம்.எல்.ஏ., திவேதிக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

உத்தரபிரதேச மாநிலம், பரூக்காபாத் மாவட்டம், சதார் சட்டப்பேரவை தொகுதி பாஜக எம்.எல்.ஏ., சுனில் தத் திவேதி. இவர், பரூக்காபாத் - பதேகார் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது, கடந்த வெள்ளிக்கிழமை மாலை (செப்.23) பீம்சென் மார்க்கெட் பகுதியில், இரண்டு பைக்குகள் மற்றும் சைக்கிளில் சென்ற மூன்று பேர் ஒருவர் மீது ஒருவர் மோதி விபத்துக்குள்ளாயினர். மூன்று பேரும் மயக்க நிலையில் சாலையில் கிடந்ததை, அந்த வழியாக பயணித்த எம்.எல்.ஏ., திவேதியின் பார்வைக்கு தெரியவந்துள்ளது.  

இதையடுத்து தன்னுடன் வந்த உதவியாளர்கள் உதவியுடன் மூன்று பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்க விரைந்து செயல்பட்டார். அருகில் இருந்த லோதியா மருத்துவமனைக்கு, மூன்று பேரையும் தனது வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டனர்.

அப்போது மருத்துவமனையில் இரண்டு, ஸ்டெச்சர்கள் மட்டுமே இருந்தன. எனவே, காயமடைந்து மயக்க நிலையில் இருந்த ஒருவரை எம்.எல்.ஏ., திவேதி தனது முதுகில் சுமந்தபடி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று சேர்த்தார். 

எம்.எல்.ஏ., திவிவேதியின் செயல் அனைவருக்கும் மனிதகுலத்தின் முன்மாதிரியாக திகழ்ந்தார். அவருக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றனர். 

பாதிக்கப்பட்டவர்கள் நாகலா பிரிதம் கிராமத்தை சேர்ந்த அரவிந்த் சிங் செளஹான், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ரமேஷ்வர் சிங் மற்றும் நாகாலா தீன் பகுதியைச் சேர்ந்த ரிஷப் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.