ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

குஜராத் மாநில முதல் பெண் டிஜிபி கீதா ஜோரி!

குஜராத் மாநில காவல்துறை தலைவராக (டிஜிபி) மூத்த ஐபிஎஸ் பெண் அதிகாரி கீதா ஜோரி நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், அந்த மாநிலத்தின் முதல் பெண் டிஜிபி எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.

News image
Updated On :4 ஏப்ரல் 2017, 8:42 pm

DIN

குஜராத் மாநில காவல்துறை தலைவராக (டிஜிபி) மூத்த ஐபிஎஸ் பெண் அதிகாரி கீதா ஜோரி நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், அந்த மாநிலத்தின் முதல் பெண் டிஜிபி எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.
குஜராத் காவல்துறை தலைவராக பதவி வகித்த பி.பி. பாண்டே, உச்ச நீதிமன்றம் தனக்கு எதிராக உத்தரவிட்டதையடுத்து பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, அந்தப் பதவியில், 1982-ஆம் ஆண்டைய ஐபிஎஸ் அதிகாரியான கீதா ஜோரி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து குஜராத் மாநில உள்துறை இணை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜா கூறுகையில், 'காந்திநகரில் இருக்கும் குஜராத் காவல்துறை வீட்டுவசதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கீதா ஜோரிக்கு கூடுதல் பொறுப்பாக டிஜிபி பதவி அளிக்கப்படுகிறது. முந்தைய டிஜிபி பி.பி. பாண்டேக்கு அளிக்கப்பட்டிருந்த பதவி நீட்டிப்பு உத்தரவும் திரும்பப் பெறப்படுகிறது' என்றார்.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு மூண்ட கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் ஜோரியும் இடம்பெற்றிருந்தார். ஆனால், பின்னர் அக்குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதேபோல், சொராபுதீன், துளசி பிரஜாபதி போலி என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை அதிகாரியாகவும் அவர் பணியாற்றினார். பிறகு அந்த வழக்கில் அவர் மீதும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
எனினும், அந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து ஜோரியை மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு விடுவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.