எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

அம்பேத்கருக்கு பிரதமர் மோடி பாராட்டு

கடல்சார் துறையில் அம்பேத்கரின் பங்களிப்புகளை நினைவுகூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு பாராட்டுத் தெரிவித்தார்.

News image
Updated On :6 ஏப்ரல் 2018, 1:06 am IST

கடல்சார் துறையில் அம்பேத்கரின் பங்களிப்புகளை நினைவுகூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
தேசிய கடல்சார் தினமான ஏப்ரல் 5-ஆம் தேதி பிரதமர் மோடி தனது சுட்டுரையில் இதுகுறித்து பதிவிட்டுள்ளதாவது:
செழுமையான வரலாறு கொண்ட இந்திய கடல்சார் துறையானது, தேசத்தின் மாற்றம் மற்றும் முன்னேற்றத்துக்கு சாத்தியமான ஆற்றல்களைக் கொண்டுள்ளது. தேசத்தை செழித்தோங்கச் செய்வதற்காக நாட்டின் கடல்சார் துறையை பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்படுவதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
கடல்சார் துறையை பலப்படுத்துவதற்கான எங்களது முயற்சிகள், அம்பேத்கரின் பணிகளை முன்னுதாரணமாகக் கொண்டவையாகும். நீர்வழித்தடம், பாசனம், கால்வாய்கள் வலைப்பின்னல், துறைமுகங்கள் ஆகியவற்றுக்கு அம்பேத்கர் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார். கடல்சார் துறையின் மதிப்பை அறிந்திருந்த அம்பேத்கர் அத்துறையில் மேற்கொண்ட பணிகளானது, இந்திய மக்களுக்கு பல்வேறு நலன்களை அளித்துள்ளது என்று பிரதமர் மோடி தனது பதிவில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.