புது தில்லி: அனைத்து நதிகளையும் இணைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அனைத்து அணைகளையும் பராமரிக்க ஒரே நதிநீர் வாரியம் அமைக்க முடியாது என்று கூறியுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் ஒன்றிணைக்க உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தொடர்ந்த பொது நலன் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அந்த உத்தரவில், நாட்டின் அனைத்து நதிகளையும் ஒன்றிணைப்பது என்பது அவ்வளவு எளிதான வேலையல்ல. அதே போல, ஒரே நதிநீர் வாரியத்தை அமைத்து அனைத்து அணைகளையும் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்படுகிறது.
நாட்டில் எங்கோ நடக்கும் ஒரு பிரச்னைக்கு இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. அணைகளின் பராமரிப்பு குறித்து இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிப்பது உச்ச நீதிமன்றத்தின் வேலையல்ல என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உத்தரவு சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மந்திராலயம் சென்ற வேன் விபத்து! 8 பக்தர்கள் பலி!
எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! எஃப்-35-ஐவிட இரு மடங்கு விலை அதிகமா?
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


