தில்லி, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் உள்ள ரோஹிங்கயா அகதிகள் முகாம்களில் செய்து கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து 4 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லியிலும், ஹரியாணா மாநிலத்தில் மேவாட், ஃபரீதாபாத் ஆகிய நகரங்களிலும் ரோஹிங்கயா அகதிகள் முகாம்கள் இயங்கி வருகின்றன.
இந்த முகாம்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததால், முதியவர்களும், சிறுவர்களும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகளால் அவதிப்படுகின்றனர் என்று ரோஹிங்கயா அகதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மேற்கண்ட உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை, மே மாதம் 9-ஆம் தேதி ஒத்திவைத்தனர்.
இதற்கு முன், இலங்கை அகதிகளுக்கு தமிழ்நாட்டில் கல்வி, மருத்துவ வசதிகள் அளிக்கப்படுவதுபோல், ரோஹிங்கயா அகதிகளுக்கும் வசதிகள் செய்துதர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று ரோஹிங்கயா அகதிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அந்த மனுவை கடந்த மாதம் 19-ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக, மத்திய அரசு முடிவு செய்யாத வரை, எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்து விட்டது.
இதுபோன்ற உத்தரவால், இந்தியா-மியான்மர் இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து விட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சூர் பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு

யூத் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட்!

பட்டாசு வெடித்து விபத்து! 12 பேர் பலி! 40 பேர் படுகாயம்! | Kerala

வாக்களிக்க வசதியாக... 4 இடங்களில் இருந்து 11,323 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


