அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

நாடாளுமன்ற முடக்கத்துக்கு எதிராக பாஜக உண்ணாவிரதம்: பிரதமர் மோடியும் பங்கேற்பு! 

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்கட்சிகளால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டதைக் கண்டித்து, பாஜக நடத்த திட்டமிட்டுள்ள உண்ணாவிரதத்தில், பிரதமர் மோடியும் பங்கேற்பார்... 

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:42 pm

DIN

புதுதில்லி: பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்கட்சிகளால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டதைக் கண்டித்து, பாஜக நடத்த திட்டமிட்டுள்ள உண்ணாவிரதத்தில், பிரதமர் மோடியும் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.     

நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீரவ் மோடி வங்கிக் கடன் மோசடி உள்ளிட்ட பல விவகாரங்களை முன்வைத்து காங்கிரஸ், அ.தி.மு.க., தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்டது. இந்நிலையில் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்றும் அமளி நீடித்தது. இன்று கூட்டத் தொடர் முடிவடைந்து பாராளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பாராளுமன்ற வளாகத்தில் செவ்வாயன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாராளுமன்ற விவகாரங்கத் துறை அமைச்சர் அனந்தகுமார், 'தொடர்ந்து பாராளுமன்றத்தை முடக்கிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் போக்கை கண்டித்து வரும் 12-ம் தேதி பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்' என்று தெரிவித்திருந்தார்.

மேலும் பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் வரும் 12-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா ஹுப்ளி நகரில் உண்ணாவிரதம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும் அன்றைய தினம் உண்ணாவிரதத்தில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும்  தில்லியில் உள்ள தனது அலுவலகத்தில் வழக்கமான பணிகளை அவர் மேற்கொள்ளவர் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.