ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், 'இந்த வழக்கில் தொடர்புடைய விசாரணை அதிகாரி (புனித மணி) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே, விசாரணையை மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 'இந்த வழக்கு விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது' எனத் தெரிவித்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 14-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'ராஜீவ் கொலை வழக்கில் 1998, மே 11-ஆம் தேதி விதிக்கப்பட்ட தண்டனை தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரும் மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வழக்கு தொடர்பான நிலவர அறிக்கையை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு விசாரணை அமைப்பான எம்டிஎம்ஏவுக்கு உத்தரவிடப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை

ஆனந்தம்! 25 ஆண்டுக் கொண்டாட்டம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


