47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மகாராஷ்டிராவின் கட்ச்ரோலி வனப்பகுதியில் 13 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை! 

மகாராஷ்டிராவின் கட்ச்ரோலி வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 13 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

News image
Updated On :22 ஏப்ரல் 2018, 9:51 am

DIN

மும்பை: மகாராஷ்டிராவின் கட்ச்ரோலி வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 13 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மகாராஷ்டிராவின் கட்ச்ரோலி மாவட்ட வனப்பகுதியில் பதுங்கியுள்ள நக்சலைட் தீவிரவாதிகளை தேடும் பணியில் சிறப்பு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வந்தனர்.

அப்பொழுது மறைந்து இருந்த நக்சலைட்கள் போலீசார் மீது அதிரடியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இருதரப்பு இடையே நடைபெற்ற கடுமையான துப்பாக்கிச் சண்டையின் முடிவில் 13 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதுபற்றிய முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.