மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

29-ஆவது ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டம்: 88 பொருட்கள் மீதான வரி குறைய வாய்ப்பு

29-ஆவது ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மீதான வரி சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2018, 8:10 am

DIN

29-ஆவது ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மீதான வரி சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் தரப்பில் அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்றுள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மீதான 29-ஆவது கூட்டம் புது தில்லியில் மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மீதான வரிச் சீர்திருத்தங்கள் மற்றும் 88 பொருட்களின் மீதான வரி குறைப்பு தொடர்பான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.  மேலும் இந்த கூட்டத்தில் பங்குச் சந்தை வரி மீதான 157 பரிந்துரைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்படுகிறது. 

Story image

இந்த கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மீதான வரிச்சுமையை மேலும் குறைப்பது தொடர்பாகவும், இவற்றின் வரி விதிப்பு முறைகளை மேலும் எளிமைப்படுத்தவும் ஆலோசிக்கப்படுகிறது. முன்னதாக, 28-ஆவது கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் தெரிவித்திருந்தது போல, இம்முறை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மீதான ஜிஎஸ்டி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. இதில், 1.5 கோடி அளவிலான வர்த்தகத்தில் ஈடுபடும் தொழில் அமைப்புகள் மீதான கலால் வரியை நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

Story image

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்ய பயன்படும் கணிணி மென்பொருளின்  கட்டணத்தை குறைப்பது. டிஜிட்டல் ரசீது முறையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்துவது. ஆந்திரம் உள்ளிட்ட மாநில அரசுகள் பரிந்துரைத்துள்ள டிராக்டர் மற்றும் அதன் உதிரி பாகங்கள், சினிமா டிக்கெட் மற்றும் பாத்திரங்கள் மீதான வரி குறைப்பு உள்ளிட்டவைகளின் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.