அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

ஒரு நொடி கூட என்னுடன் வாதம் செய்ய இயலாது: ரபேல் விவகாரத்தில் மோடிக்கு ராகுல் மீண்டும் சவால்  

ரபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் ஒரு நொடி கூட என்னுடன் வாதம் செய்ய இயலாது என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் சவால் விடுத்துள்ளார்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2018, 5:16 pm IST

புது தில்லி: ரபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் ஒரு நொடி கூட என்னுடன் வாதம் செய்ய இயலாது என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் சவால் விடுத்துள்ளார்.

கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் பா.ஜனதா அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக அவர் பேசும்போது, "பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான  ஒப்பந்தம் தொடர்பாக   பிரதமர் மோடி என்னுடன் நேருக்கு நேர் விவாதம் செய்யத் தயாரா? அவரால் என்னுடைய கண்களை பார்த்து பேச முடியாது. அவர் எங்கு வேண்டுமென்றாலும் பார்த்துக் கொள்ளலாம், ஆனால் என்னுடைய கண்களை பார்க்க முடியாது" என்று தெரிவித்தார்..

இந்நிலையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் ஒரு நொடி கூட என்னுடன் வாதம் செய்ய இயலாது என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் சவால் விடுத்துள்ளார்.

திங்களன்று கர்நாடக மாநிலம் பிதாரில் காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் ஒன்று நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஏற்கனவே விடுத்த சவாலை மீண்டும் நினைவுபடுத்துகிறேன். இதுதொடர்பாக  பிரதமர் மோடியுடன் எவ்வளவு நேரமென்றாலும் விவாதத்திற்கு நான் தயாராக உள்ளேன், அவரால் ஒரு நொடி கூட என்னுடன் விவாதம் செய்ய முடியாது. திருட்டில் ஈடுபடும் ஒருவரால் என்னுடைய கண்களை நேராக பார்க்கவே முடியாது

இவ்வாறு ராகுல் காந்தி பேசியுள்ளார். அவரது இந்த பேச்சானது இரு கட்சிகளுக்கு இடையேயான மோதலை மேலும் வலுப்படுத்தியுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.