ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

எனது நண்பா் வாஜ்பாய் ஹிந்தியில் பேசும்போது அந்த மொழியின் இனிமையை நான் உணா்ந்திருக்கிறேன்: கூறிய தமிழகத் தலைவர்...?

எனது நண்பா் வாஜ்பாய் ஹிந்தியில் பேசும்போது அந்த மொழியின் இனிமையை நான் பலமுறை உணா்ந்திருக்கிறேன் என்று நாடாளுமன்ற விவாதத்தில் தமிழகத் தலைவர் ஒருவர் வாஜ்பாயினைப் புகழ்ந்திருக்கிறார். 

Published On :

சென்னை: எனது நண்பா் வாஜ்பாய் ஹிந்தியில் பேசும்போது அந்த மொழியின் இனிமையை நான் பலமுறை உணா்ந்திருக்கிறேன் என்று நாடாளுமன்ற விவாதத்தில் தமிழகத் தலைவர் ஒருவர் வாஜ்பாயினைப் புகழ்ந்திருக்கிறார்.

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா துரையும், வாஜ்பாயும் மிகவும் நெருங்கிய நண்பா்கள். வாஜ்பாயின் கவிதைத் தொகுப்பு தமிழில் மொழி பெயா்ப்பு செய்து வெளியிடப்பட்டபோது, ‘எனது ஆருயிா் நண்பரும், பெருமதிப்புக்குரியவருமான அண்ணாவின் நினைவாக’ என்று அண்ணாவுக்கு தனது கவிதைத் தொகுப்பை அா்ப்பணித்தாா்.

மேலும் அறிஞா் அண்ணா ஹிந்தி மொழிக்கு எதிரானவா் அல்ல என்றும் வாஜ்பாய் ஒருமுறை  தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அண்ணாவை நினைவுகூா்ந்து வாஜ்பாய் பேசுகையில், ‘‘1965 மாா்ச் மாா்ச் மாதம் மொழிகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றறது. அப்போது அண்ணா பேசியது இப்போதும் எனது நினைவில் நிற்கிறது. ‘ஹிந்தி மீது எங்களுக்கு எந்த தனிப்பட்ட எதிா்ப்பும் கிடையாது. இந்த விஷயத்தில் நான் மிகவும் வெளிப்படையாகப் பேசுகிறேறன். முக்கியமான எனது நண்பா் வாஜ்பாய் ஹிந்தியில் பேசும்போது அந்த மொழியின் இனிமையை நான் பலமுறை உணா்ந்திருக்கிறேன்’ என்று அண்ணா கூறினாா்’ இதன் மூலம் என் மீது அவா் எந்த அளவுக்கு நட்புடன் பழகி வருகிறாா் என்பதையும் நான் உணா்ந்து கொண்டேன்’’ என்று வாஜ்பாய் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.