சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் நாளை பொது விடுமுறை அறிவிப்பு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வியாழக்கிழமை மாலை 5.05 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் அரசு வெள்ளிக்கிழமை அரசு விடுமுறையை அறிவித்துள்ளது. 

தமிழக அரசு:

நாளை நாள் பொது விடுமுறை அறிவிப்பு. மேலும், 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தலைமைச் செயலாளர் அறிவிப்பு.  

பஞ்சாப் அரசு:

வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்தும் வகையில் பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் நாளை செயல்படாது. அவரது மறைவையொட்டி 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது என அறிவிப்பு. 

ஜார்கண்ட் அரசு:

7 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும், அங்கு நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச அரசு:

நாளை பொது விடுமுறையும், 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிகார் அரசு:

7 நாள் துக்கம் அனுசரிக்கப்படவுள்ளது. அதோடு நாளை பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி அரசு:

நாளை பொது விடுமுறை, 7 நாள் துக்கம் அனுசரிப்பு என அறிவிப்பு. 

உத்தர பிரதேச அரசு:

நாளை பொது விடுமுறையை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.