டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வாஜ்பாய் கவலைக்கிடம்: ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் நலம் விசாரிப்பு

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாயை ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:31 pm

DIN

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாயை ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர். 

முன்னாள் பிரதமரும் பாஜகவின் மூத்த தலைவருமான வாஜ்பாய் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து நலம் விசாரித்தனர். 

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமூத ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பிகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுஷில் மோடி, அமைச்சர் நந்த் கிஷோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடல் நிலை குறித்து நலம் விசாரித்து வருகின்றனர். 

மத்திய அமைச்சர் ஜேபி நட்டா கூறுகையில், "வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து தங்களது முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். எய்மஸ் சார்பில் அடுத்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும்" என்று தெரிவித்தார்.  

இதன்மூலம், எய்ம்ஸ் மருத்துவமனையின் அடுத்த மருத்துவ அறிக்கை மாலை 5.30 அளவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.