காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

ஒரு கிலோ இனிப்புகளின் விலை ரூ 9000: எங்கு? ஏன் தெரியுமா?   

குஜராத் மாநிலம் சூரத்தில் இனிப்புக்கடை ஒன்றில் ஒரு கிலோ இனிப்பு ரூ 9000 -க்கு விற்பனை செய்யப்படும் தகவல் தெரிய வந்துள்ளது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2018, 2:24 pm IST

சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் இனிப்புக்கடை ஒன்றில் ஒரு கிலோ இனிப்பு ரூ 9000 -க்கு விற்பனை செய்யப்படும் தகவல் தெரிய வந்துள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் '24 காரட் மித்தாய் மேஜிக்' என்னும் இனிப்புக் கடை ஒன்று உள்ளது. விரைவில் வர இருக்கும் 'ரக்ஷா பந்தன்' விழாவினை முன்னிட்டு  இந்தக் கடையில் புதிய  வகை இனிப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு குறிப்பிட்ட வகை இனிப்புகள் மட்டும் கிலோ ரூ 9000 -க்கு விற்பனை செய்யப்படும் தகவல் வாடிக்கையாளர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதற்குக் காரணம் என்னவென்றால் குறிப்பிட்ட வகை இனிப்புகள் மீது சுத்தமான தங்கம் இழைகளாக பூசப்பட்டுள்ளதுதான்.

இதுதொடர்பாக கடையின் உரிமையாளர் பிரின்ஸ் மித்தாய்வாலா கூறியதாவது:

இந்த வகை இனிப்புகளில் வழக்கமாக பயன்படுத்தப்படும் வெள்ளி இழைகளுக்கு பதிலாக, தூய தங்க இழைகள் பயன்படுத்தப்படுகின்றது. அதனுடைய ஆரோக்கிய பயன்பாடுகளின் பொருட்டே தங்கம் பயன்படுத்தப்படுகிறது. விரைவில் ரக்ஷா பந்தன் வரவுள்ளதால் ஒரு சிலர் இதனை வாங்கிச் செல்கின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

'தங்க இனிப்புகள்' என்று அழைக்கப்படும் இவைதான் தற்பொழுதுக்கு அங்கு பேசுபொருள் ஆகியிருக்கின்றன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.