
தில்லி மண்டி ஹவுஸ் பகுதியில் உள்ள தூர்தர்ஷன் பவனில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
தில்லி மண்டி ஹவுஸில் உள்ள தூர்தர்ஷன் பவனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மதியம் 12.50 மணிக்கு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அனுப்பப்பட்டது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து 10 நிமிடங்களுக்குள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தரைத்தளத்தில் இருந்த ஏசி அறையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதுவரை எந்த உயிர்சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை எனவும் தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.