திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் உயர்ந்துள்ளது: அருண் ஜேட்லி விளக்கம்

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 85.51 லட்சத்தில் இருந்து 1.07 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் உயர்ந்துள்ளது. வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 6.86 கோடியாக அதிகரித்துள்ளதுதான் அதற்கு முக்கிய சாட்சியாகும்.

கறுப்பு பணத்தை தடுப்பது, வருமான வரி தாக்கலை அதிகரிப்பதுதான் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக இருந்தது. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 3.8 கோடியில் இருந்து 6.86 கோடியாக அதிகரித்துள்ளது.

பழைய ரூபாய் நோட்டு விவகாரத்திற்கு பிறகு வருமான வரி வசூல் ரூ. 6.38 லட்சம் கோடியில் இருந்து ரூ. 10.02 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் பெரும்பாலான பணம் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பெருந்தொகையின் உரிமையாளர் யார் என்பது தெரியவந்துள்ளது. 

இந்த பணமிதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு 1.8 மில்லியன் அளவு வங்கிக் கணக்குகளில் புதிதாக பணம் செலுத்தியவர்கள் அடையாளம் கண்டறியப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் பலருக்கு அபராதம் மற்றும் வரிகள் விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 85.51 லட்சத்தில் இருந்து 1.07 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.