நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மிஸோரமில் ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ்? முதல்வர் லால் தன்ஹாவ்லா தோல்வி முகம்

மிஸோரம் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 28ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :11 டிசம்பர் 2018, 6:20 am

DIN

மிஸோரம் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 28ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியதில் இருந்தே முக்கிய எதிர்க்கட்சியான மிஸோ தேசிய முன்னணிக் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. தற்போது மிஸோ தேசிய முன்னணிக் கட்சி 27 தொகுதிகளிலும், ஆளும் காங்கிரஸ் 8 தொகுதகளிலும், பாஜக 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.

40 தொகுதிகளைக் கொண்ட மிஸோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மிஸோரம் முதல்வர் லால் தன்ஹாவ்லா போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றான செர்சிப்- தொகுதியில் அதிகபட்சமாக 81 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ஒரே மாநிலம் மிஸோரம் மட்டுமே. இங்குள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. இங்கு 209 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

மிஸோரமில் முக்கிய எதிர்க்கட்சியான மிஸோ தேசிய முன்னணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக வாக்கு கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.