திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மும்பை இஎஸ்ஐ மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

மும்பையின் அந்தேரி பகுதியில் செயல்பட்டு வரும் இஎஸ்ஐ மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின்

News image
Updated On :18 டிசம்பர் 2018, 5:22 am

DIN

மும்பையின் அந்தேரி பகுதியில் செயல்பட்டு வரும் இஎஸ்ஐ மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின்  எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

மும்பையின் அந்தேரி பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான ‘காம்கார்’ என்ற தொழிலாளர் நல மருத்துவமனை (இஎஸ்ஐசி) உள்ளது.

5 மாடி கட்டம் கொண்ட இந்த மருத்துவமனையில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில், மருத்துவமனையின் 4-வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியதால், அதிகளவில் கரும்புகை வெளியேறி சிறிது நேரத்திலேயே மருத்துவமனை பகுதி முழுவதையும் புகை மண்டலம் சூழ்ந்தது. 

இதையடுத்து மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள், உள்நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் அலறி அடித்துக்கொண்டு வெளியேற முயன்றார்கள்.
 
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 12 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்கொள் கொண்டு வந்தனர். 

தீயணைப்பு பணி ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் ராட்சத கிரேன் மூலம் மருத்துவமனைக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியிலும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். இதில், 141 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். 

இந்த தீ விபத்தில் சிக்கி நேற்று 5 பேர் உயிரிழந்தனர். 141 காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை பெற்று வந்தனர். 

இந்நிலையில், பலத்த தீ காயங்களுடன் சிகிச்சை பெறுறு வந்தவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி 3 பேர் இன்று உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.