திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

நம்மையெல்லாம் ஆட்டிப்படைக்கும் சனிக்கிரகத்துக்கே இந்த நிலையா? நாசாவின் அதிர்ச்சித் தகவல்

பனிக்கட்டிகளினால் மற்ற கிரகங்களுக்கு இல்லாத வகையில் சனிக்கிரகத்துக்கு இருக்கும் அந்த அழகான வளையம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST


வாஷிங்டன்: பனிக்கட்டிகளினால் மற்ற கிரகங்களுக்கு இல்லாத வகையில் சனிக்கிரகத்துக்கு இருக்கும் அந்த அழகான வளையம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மெல்ல கரைந்து வரும் சனிக்கிரகத்தின் இந்த அழகிய வளையம், இன்னும் 100 மில்லியன் ஆண்டுகளில் முற்றிலும் மறைந்து போய்விடும் என்றும் நாசா கணித்துள்ளது.

மழை வளையம் என்று அழைக்கப்படும் சனிக் கிரகத்தின் அழகிய வளையம், சனிக் கிரகம் தோன்றியபோதே உருவானதா அல்லது நாளடைவில் உருவானதா என்பது குறித்து விஞ்ஞானிகள் பல காலமாக ஆராய்ந்து வரும் நிலையில் இது இடையில் உருவான வளையம் என்று கணித்துள்ளனர்.

சனிக்கிரகத்தின் வாழ்நாளில் இடையில் தோன்றிய வளையத்துடன் அதனை பார்க்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஜூபிடர், யுரேனஸ், நெப்ட்யூன் போன்ற கிரங்களுக்கும் இதுபோன்ற மெல்லிய வளையமே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

பூமியின் புவியீர்ப்பு விசையை விட சனியின் ஈர்ப்பு விசை அதிகம். வியாழனுக்கு அடுத்தபடியாக பெரிய கோள் சனிக்கிரகமாகும்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.