74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

'இரக்கமின்றி கொல்ல வேண்டும்' விடியோ பதிவுக்கு குமாரசாமி விளக்கம்

தனது கட்சியின் மூத்த தலைவரை கொலை செய்தவர்களை இரக்கமின்றி கொல்ல வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :25 டிசம்பர் 2018, 6:14 pm IST

தனது கட்சியின் மூத்த தலைவரை கொலை செய்தவர்களை இரக்கமின்றி கொல்ல வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகாவில் ஆளும் மஜத கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் என்பவர் தனது காரில் மட்டூர் செல்லும் வழியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அக்கட்சித் தலைவரும், கர்நாடக முதல்வருமான குமாரசாமி பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், பிரகாஷ் நல்ல மனிதர். அவரை எதற்காக கொலை செய்தார்கள் எனத் தெரியவில்லை. அவர்களைக் கண்டுபிடித்து இரக்கமின்றி சுட்டுத்தள்ள வேண்டும். இதனால் எந்தப் பிரச்னையும் கிடையாது என்று தொலைபேசியில் பேசியிருந்தார்.

இதுகுறித்து குமாரசாமி அளித்த விளக்கத்தில் தெரிவித்ததாவது, அந்த நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன். அவர்களை இரக்கமின்றி கொல்ல வேண்டும் என்பது எனது உத்தரவு அல்ல. அவர்கள் ஏற்கனவே இரு கொலைகளில் சம்பந்தப்பட்டு சிறையில் இருந்துள்ளனர். பிணையில் வெளிவந்த இரண்டு தினங்களில் தற்போது மீண்டும் ஒருவரை கொலை செய்துள்ளனர். இதுபோன்று பிணையை அவர்கள் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.