கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் செய்தியாளர்களுடனான சந்திப்பை பிரதமர் மோடி தவிர்த்தது ஏன்? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் வட மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக பிரமுகர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி அண்மையில் கலந்துரையாடினார்.
அப்போது, வரிவதிப்பு கொள்கையால் நடுத்தர வர்க்கத்தினர் பாதிப்புக்குள்ளானது தொடர்பாக பாஜகவினர் மோடியிடம் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு அவர் பதிலளிக்காமல் தவிர்த்துவிட்டு, வேறு விவகாரம் குறித்து பேசியதாகவும் செய்திகள் வெளியாகின.
இதை குறிப்பிட்டு ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமைசுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
நடுத்தர பிரிவு மக்களிடம் இருந்து மத்திய அரசு வரி வசூலிப்பதில் மும்முரமாய் இருக்கிறது. அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று கருதவில்லை என்று தமிழகத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்வியை மோடி புறக்கணித்தார்.
மோடி தனது ஆட்சிக் காலத்தில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததில்லை. கட்சியினருடனான கலந்துரையாடலிலாவது அவர் பதிலளித்திருக்கலாம்.
ஒரே ஒருமுறையாவது செய்தியாளர்களுடனான சந்திப்பை மோடி நடத்த முன்வர வேண்டும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகைகள் எல்லைகளை வகுத்துக்கொள்ள வேண்டும்: நித்யா மெனன்

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!

பவானி - துபைக்கு ரூ. 10,000! அரசுப் பேருந்து டிக்கெட்டால் அதிர்ச்சி!

அரசுக் கலைக் கல்லூரிகளில் அதிக விண்ணப்பம் வந்திருக்கும் படிப்பு இதுதான்!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



