ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

ஜம்முவில் தொடரும் கடுங்குளிர்: நீர்நிலைகள் உறைந்தன: குடிநீர் வழங்குவதில் சிக்கல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் தொடர்ந்து கடுங்குளிர் காற்று வீசி வருவதால், அங்குள்ள பெரும்பாலான நீர்நிலைகள் உறைந்துவிட்டன. இதனால், அங்கு மக்களுக்குக் குடிநீர்

Updated On :26 டிசம்பர் 2018, 1:10 am IST


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் தொடர்ந்து கடுங்குளிர் காற்று வீசி வருவதால், அங்குள்ள பெரும்பாலான நீர்நிலைகள் உறைந்துவிட்டன. இதனால், அங்கு மக்களுக்குக் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடுங்குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கோடைக்காலத் தலைநகரான ஸ்ரீநகரில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுங்குளிர் நிலவி வருகிறது. அங்கு, திங்கள்கிழமை மைனஸ் 6.8 டிகிரி செல்ஷியஸ் அளவில் வெப்பநிலை பதிவானது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மைனஸ் 5.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.
இது குறித்து, வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் கூறுகையில், தெற்கு காஷ்மீரின் குவாஸிகண்ட் பகுதியில் மைனஸ் 5.2 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், பஹல்காம் பகுதியில் மைனஸ் 7.7 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், வடக்கு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் மைனஸ் 5.2 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், குல்மார்க் பகுதியில் மைனஸ் 7.6 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் வெப்பநிலை பதிவானது.
மேலும், லே பகுதியில் மைனஸ் 10 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. அங்கு திங்கள்கிழமை மைனஸ் 14.7 டிகிரி செல்ஷியல் வெப்பநிலை பதிவாகி இருந்தது. கார்கில் பகுதியில் மைனஸ் 14.2 டிகிரி செல்ஷியஸாக வெப்பநிலை பதிவானது என்றனர்.மாநிலத்தில் தற்போது கடுங்குளிர் காலம் நிலவி வருகிறது. இது ஜனவரி 31 வரை நீடிக்கும். அடுத்த 20 நாள்களுக்கு சிறுகுளிர் காலம் நிலவும். பின்னர், அடுத்த 10 நாள்களுக்கு குறுகுளிர் காலம் நிலவும். வழக்கமாக, நவம்பர் மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வாரங்களில் கடும் பனிப்பொழிவு நிலவும். ஆனால், தற்போது வறண்ட குளிர்நிலை நிலவுவதால், மக்களுக்கு இருமல், சளி, சுவாசப் பிரச்னைகள் ஆகியவை ஏற்பட்டு வருகின்றன.
கடுங்குளிரால் பெரும்பாலான நீர்நிலைகள் உறைந்துவிட்ட நிலையில், அங்கு மக்களுக்குக் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப், ஹரியாணாவில் பனிமூட்டம்: பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில், வெப்பநிலை மேலும் குறைந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து, வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் கூறியதாவது:
அமிருதசரஸ், ஆதம்பூர் ஆகிய பகுதிகளில் 0.4 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், பஞ்சாப், பதான்கோட் ஆகிய பகுதிகளில் 2.9 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், லூதியானாவில் 2.8 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் வெப்பநிலை பதிவானது. மேலும், பரித்கோட்டில் 3.8 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், குர்தாஸ்பூரில் 3.5 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், பதின்டாவில் 4.5 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் வெப்பநிலை பதிவானது.
யூனியன் பிரதேசமான சண்டீகரில் 5.5 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், ஹிசார் பகுதியில் 2.8 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், ரோதக் பகுதியில் 4.2 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் வெப்பநிலை பதிவானது. பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியதால், அருகிலுள்ள கட்டடங்களும், வாகனங்களும் கண்களுக்குப் புலப்படாத நிலை ஏற்பட்டது. அங்கு நிலவும் கடுங்குளிர் அடுத்த சில நாள்களுக்குத் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.