முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பஞ்சாப்பில் ராஜீவ் சிலை சேதம்: சீக்கிய கலவரத்துக்கு பாஜக, ஆர்எஸ்எஸ் மீது அமரீந்தர் சிங் தாக்கு

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் அமைந்துள்ள மறைந்த பிரதமர் ராஜீவ் சிலையை மர்ம நபர்கள் செவ்வாய்கிழமை சேதப்படுத்தினர். 

News image
Updated On :25 டிசம்பர் 2018, 8:44 pm IST

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் அமைந்துள்ள மறைந்த பிரதமர் ராஜீவ் சிலையை மர்ம நபர்கள் செவ்வாய்கிழமை சேதப்படுத்தினர். இதுதொடர்பாக 2 மீது வழக்குப்பதிவு செய்த பஞ்சாப் போலீஸார் ஒருவரை கைது செய்தனர்.

இந்நிலையில், பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங் கூறுகையில், 

இந்த செயலுக்கு சிரோமி அகாலிதளம் தான் காரணம். அவர்களின் இந்த கீழ்த்தரமான செயலுக்காக அக்கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற செயல்களால் வாக்கு வங்கியை பலப்படுத்துவதாக நினைத்து அதை இழக்க வேண்டாம் எனவும் அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

1984-ல் நடைபெற்ற சீக்கிய கலவரத்துக்கும் நேரு குடும்பத்துக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. அவர்களுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இதில் வேண்டுமென்றே நேரு குடும்பத்தினரை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், உண்மையில் பாஜக, ஆர்எஸ்எஸ் தான் சீக்கிய கலவரத்துக்கு முக்கிய காரணம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.