பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் அமைந்துள்ள மறைந்த பிரதமர் ராஜீவ் சிலையை மர்ம நபர்கள் செவ்வாய்கிழமை சேதப்படுத்தினர். இதுதொடர்பாக 2 மீது வழக்குப்பதிவு செய்த பஞ்சாப் போலீஸார் ஒருவரை கைது செய்தனர்.
இந்நிலையில், பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங் கூறுகையில்,
இந்த செயலுக்கு சிரோமி அகாலிதளம் தான் காரணம். அவர்களின் இந்த கீழ்த்தரமான செயலுக்காக அக்கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற செயல்களால் வாக்கு வங்கியை பலப்படுத்துவதாக நினைத்து அதை இழக்க வேண்டாம் எனவும் அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
1984-ல் நடைபெற்ற சீக்கிய கலவரத்துக்கும் நேரு குடும்பத்துக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. அவர்களுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இதில் வேண்டுமென்றே நேரு குடும்பத்தினரை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், உண்மையில் பாஜக, ஆர்எஸ்எஸ் தான் சீக்கிய கலவரத்துக்கு முக்கிய காரணம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










