முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

குடியரசுத் தலைவரின் பாதுகாவலர் பணியில் சாதி அடிப்படையில் நியமனம்?: பதிலளிக்க தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

குடியரசுத் தலைவரின் பாதுகாவலர் பணியில் சாதி அடிப்படையில் நியமனம் செய்யப்படுவதாக கூறித் தொடுக்கப்பட்ட மனுவிற்கு பதிலளிக்க, மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

News image
Updated On :26 டிசம்பர் 2018, 8:12 pm IST

புது தில்லி: குடியரசுத் தலைவரின் பாதுகாவலர் பணியில் சாதி அடிப்படையில் நியமனம் செய்யப்படுவதாக கூறித் தொடுக்கப்பட்ட மனுவிற்கு பதிலளிக்க, மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஹரியாணாவைச் சேர்ந்த கவுரவ் யாதவ் என்பவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

குடியரசு தலைவரின் பாதுகாவலர் பணிக்கான நியமனத் தேர்வு கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி நடந்தது, இந்த தேர்வுக்கு ஜாட், ராஜ்புத் மற்றும் ஜாட் சீக்கியர் ஆகிய 3 சாதியினர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர்.  எனவே இந்த நியமனத்தினை ஒத்தி வைக்க வேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. அந்த மனுவானது நீதிபதிகள் எஸ். முரளிதர் மற்றும் சஞ்சீவ் நாருலா ஆகியோர் கொண்ட அமர்வின் முன் புதனன்று விசாரணைக்கு வந்தது. 

இந்த மனு மீது நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய ராணுவ அமைச்சகம்,  ராணுவ உயரதிகாரி, குடியரசு தலைவரின் பாதுகாவல் தளபதி மற்றும் ராணுவ பணி நியமன இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. 

அதேநேரம்  இதுபற்றி வேறு எவரும் கூடுதலாக மனு செய்ய விரும்பினால் அடுத்த விசாரணைக்கு முன் அவர்கள் கோரிக்கை வைக்கலாம்.  

இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த வருடம் மே 8ந் தேதிக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். 

முன்னதாக இதுபோன்ற மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் மற்றும் தில்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.