புதுதில்லி: நாட்டை பிளவு படுத்தும் இஸ்லாமியர்கள் நாட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்ற பாஜக தலைவர் வினய் கட்யாரின் பேச்சு கடும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது
ஹைதராபாத்திலிருந்து செயல்படும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஒவைசி, 'இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களை பாகிஸ்தானி என்று அழைப்பவர்களை தண்டிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான வினய் கட்யார் தில்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இஸ்லாமியர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும். அவர்கள் மதத்தின் பேரால் இந்த நாட்டினை பிளவுபடுத்தியுளார்கள். அவர்கள் இந்த நாட்டில் வசிக்க என்ன அவசியம் இருக்கிறது? அவர்கள் வேண்டுமானால் பாகிஸ்தானுக்கோ அல்லது வங்களாதேசத்துக்கோ செல்லலாம். அவர்களுக்கு இங்கு என்ன வேலை இருக்கிறது?
வந்தே மாதரம் பாடலுக்கு மரியாதை செலுத்தாதவர்கள், தேசிய கொடிக்கு அவமரியாதை இழைப்பவர்களை தண்டிக்கும் விதமாக ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். பாகிஸ்தான் கொடியினை இங்கு ஏற்றுபவர்கள் கூடதண்டிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவில் இருந்து விலகியது ஏன்?அரசியல் இயக்கம் தொடங்குவது ஏன்? Annamalai விளக்கம்!

நார்வே செஸ்: குகேஷை வீழ்த்திய பிரக்ஞானந்தா..! பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! தர்காவை அகற்றுவதே வலதுசாரிகளின் நோக்கம்: கம்யூ.

அண்ணாமலையின் புதிய இயக்கம் யாருக்காக, யாருடைய பினாமியாக தொடங்கப்படுகிறது?
விடியோக்கள்

பாஜகவில் இருந்து விலகியது ஏன்?அரசியல் இயக்கம் தொடங்குவது ஏன்? Annamalai விளக்கம்!

கோட் போட்டு கோட்டை விட்டுட்டீங்களே! முதல்வர் விஜய்க்கு உதயநிதி பதிலடி! | Dinamani

Dinamani வார ராசிபலன்! | June 7 முதல் 13 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



