புதுதில்லி: நாட்டை பிளவு படுத்தும் இஸ்லாமியர்கள் நாட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்ற பாஜக தலைவர் வினய் கட்யாரின் பேச்சு கடும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது
ஹைதராபாத்திலிருந்து செயல்படும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஒவைசி, 'இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களை பாகிஸ்தானி என்று அழைப்பவர்களை தண்டிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான வினய் கட்யார் தில்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இஸ்லாமியர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும். அவர்கள் மதத்தின் பேரால் இந்த நாட்டினை பிளவுபடுத்தியுளார்கள். அவர்கள் இந்த நாட்டில் வசிக்க என்ன அவசியம் இருக்கிறது? அவர்கள் வேண்டுமானால் பாகிஸ்தானுக்கோ அல்லது வங்களாதேசத்துக்கோ செல்லலாம். அவர்களுக்கு இங்கு என்ன வேலை இருக்கிறது?
வந்தே மாதரம் பாடலுக்கு மரியாதை செலுத்தாதவர்கள், தேசிய கொடிக்கு அவமரியாதை இழைப்பவர்களை தண்டிக்கும் விதமாக ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். பாகிஸ்தான் கொடியினை இங்கு ஏற்றுபவர்கள் கூடதண்டிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!

பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


