திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

லஷ்கர் இ தொய்பாவில் சேருமாறு வாட்ஸப் அழைப்பு: இளைஞர் காவல்துறையில் புகார்! 

உத்தர பிரதேசத்தில் 'லஷ்கர் இ தொய்பா' என்னும் வாட்ஸப் குழுவில் சேருமாறு அழைப்பு வந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்த இளைஞர் ஒருவர் சைபர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

News image
Updated On :26 பிப்ரவரி 2018, 1:42 pm IST

லக்னௌ:  உத்தர பிரதேசத்தில் 'லஷ்கர் இ தொய்பா' என்னும் வாட்ஸப் குழுவில் சேருமாறு அழைப்பு வந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்த இளைஞர் ஒருவர் சைபர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னௌவில் இளைஞர் ஒருவருக்கு அவர் உறுப்பினராக உள்ள வாட்ஸப் குழுவில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அது 'லஷ்கர் இ தொய்பா' என்னும் வாட்ஸப் குழுவில் சேருமாறு வந்த அழைப்பாகும். இதனால் அவர் கடும் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இளைஞரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் தீவிரவாத தடுப்பு பிரிவினருக்கும் இது பற்றி உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையின் ஆரம்ப கட்ட விசாரணையில் அந்த குழுவானது ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாடா மாவட்டத்தைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவனால் உருவாக்கப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.