100 வருடங்கள் பழமையான பாலத்துக்கு மாற்றாக 7:30 மணி நேரத்தில் புதிய பாலம் கட்டி வடக்கு மண்டல ரயில்வேத்துறை அசத்தியுள்ளது.
இதுகுறித்து வடக்கு மண்டல ரயில்வேத்துறை பொது மேலாளர் விஷ்வேஷ் சௌபே கூறியதாவது:
லக்னௌ, சஹாரண்பூர் இடையிலான ரயில் பாதை சீரமைக்கப்பட்டு வருகிறது. இதில், புண்ட்கி, நாகினா இடையிலான ரயில் பாதை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இங்கு 100 வருடங்கள் பழமையான ரயில்வே பாலம் உள்ளது. எனவே இதை மாற்ற முடிவு செய்தோம். இதையடுத்து 100 மற்றும் 60 டன்கள் எடையை சுமக்கும் கிரேன், ஜேசிபி மற்றும் பொக்லேன் இயந்திரங்களின் உதவியுடன் புதிய ஸ்டீல் பாலம் அமைக்க திட்டமிட்டோம்.
அவ்வகையில் இந்த புதிய பாலம் 7:30 மணி நேரங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுவரை இந்த பாதையில் உள்ள 4 பழைய பாலங்கள் அகற்றப்பட்டு புதிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஒரு மாதத்துக்குள்ளாக மேலும் மூன்று புதிய பாலங்கள் அமைக்கப்படவுள்ளன என்றார்.
முன்னதாக, பிட்டோரா என்ற இடத்தில் வடக்கு மண்டல ரயில்வேத்துறையால் 48 மீட்டர் நீளம் கொண்ட பாலம் 8 மணி நேரத்தில் அமைக்கப்பட்டிருந்தது சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


