பிகார் முதல்வர் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்

பிகார் முதல்வர் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனம் மீது வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.
பிகார் முதல்வர் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்
Updated on
1 min read

பிகார் முதல்வர் நிதீஷ் குமார், அம்மாநிலத்தில் உள்ள நந்தன் கிராமத்துக்கு கட்டமைப்பு மற்றும் திட்டப் பணிகளின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய வெள்ளிக்கிழமை நேரில் சென்றார்.

அப்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நிதீஷ் குமார் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்களின் மீது திடீரென கல்வீசி தாக்கினர்.

இதனால் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டது. இந்நிலையில், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், பலத்த பாதுகாப்புடன் பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். 

இதற்கிடையில் பிகார் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் அரசின் திட்டப்பணிகள், கட்டமைப்பு வசதிகள் உள்ளிடவைகளின் தற்போதைய நிலை குறித்து மாநிலம் முழுவதும் டிசம்பர் 12-ந் தேதி முதல் முதல்வர் நிதீஷ் குமார், நேரில் சென்று ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com