மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

69-ஆவது குடியரசு தினம்: டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்

நாட்டின் 69-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கூகுள் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

Published On :

நாட்டின் 69-வது குடியரசு தினவிழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஆசியான் கூட்டமைப்புத் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணைக் குடியரசுத் துணை தலைவர் வெங்கைய்ய நாயுடு, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், ராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நடைபெற்ற குடியரசு தின சிறப்பு அணிவகுப்பை அனைவரும் கண்டு ரசித்தனர்.

அதுபோல, நாடு முழுவதும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடி ஏற்றினார். 

இந்நிலையில், தினமும் உள்ள சிறப்புகளை கௌரவித்து நினைவுபடுத்தும் விதமாக கூகுள் டூடுல் வெளியிடுவது வாடிக்கை. அவ்வகையில் 69-ஆவது இந்திய குடியரசு தினத்தை கௌரவிக்கும் விதமாக கூகுள் இணையதளம் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.