ஒடிஸாவின் தல்சாரி கடல் திருவிழா பாலசூர் மாவட்டத்தில் போக்ராய் என்ற இடத்தில் புதன்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதனை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் துவக்கி வைத்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்து நவீன் பட்நாயக்கை நோக்கி முட்டைகள் வீசப்பட்டன. இதனால் அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு முதல்வர் மீது முட்டை வீசியவரை கைது செய்தனர்.
இதில், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் மீது முட்டை வீசியது ஒரு பெண் என்பது தெரியவந்தது. அவருடைய கணவர் பாஜக-வைச் சேர்ந்தவர் எனவும், தன்னுடைய கணவரின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பெண் இந்த செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
அந்த பெண் உரிய முறையில் தனது புகாரை முதல்வரிடம் தெரிவித்து இருக்கலாம். ஆனால், அவர் இதுமாதிரி ஒரு செயலில் ஈடுபட்டது தொடர்பாக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இவர் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் அவருக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்படும் என பாலசூர் காவல்துறை அதிகாரி நிதி சேகர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


