புது தில்லி: அயோத்தியில் சா்ச்சைக்குரிய இடத்தில் தன்னை வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரணை நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.
முன்னதாக, அயோத்தியில் சா்ச்சைக்குரிய இடத்தில் (ராமா் கோயில் இருந்ததாக கூறப்படும் இடம்) வழிபாடு நடத்த தன்னை அனுமதிக்க வேண்டும். ஏனெனில், வழிபாடு நடத்துவது என்பது அரசமைப்புச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு இந்தியருக்கும் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை’ என்று சுப்பிரமணியன் சுவாமி தனது மனுவில் கூறியிருந்தாா்.
இந்நிலையில், தனது மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சுவாமி கோரிக்கை வைத்தாா். இந்நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, சுவாமியின் மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள நீதிபதிகள் மறுத்துவிட்டனா். மேலும், உங்கள் மனுவில் எப்போது நீதிமன்றம் அனுமதிக்கிறதோ அப்போது வழிபாடு நடத்திக் கொள்கிறேறன் என்று குறிப்பிட்டுள்ளீா்கள். எனவே, இந்த மனுவை அவசர வழக்காக எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதிகள் கூறிவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


