

மோசடியாளர்கள் என ஆர்பிஐ முத்திரைக் குத்திய பிறகும் அளவுக்கு அதிகமாக கடன் கொடுத்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகளை கைது செய்தது சிபிஐ.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாத மொத்தத் தொகை ரூ.2,654 கோடியாகும்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த சிபிஐ, கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு சோதனைகளை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக தனியார் நிறுவனத்தின் நிர்வாகிகளை கைது செய்ததோடு, இவர்கள் மோசடியாளர்கள் என ஆர்பிஐ அறிவித்த பிறகும், உச்ச வரம்பையும் தாண்டி தங்களது பரிந்துரையின் பேரில் அளவுக்கு அதிகமாக கடன் கொடுத்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகளை சிபிஐ நேற்று இரவு கைது செய்துள்ளது.
வங்கி விதிகளை மீறி இவர்கள் கடன் கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே சிபிஐ கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.